நாட்டில் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் நுகர்வோருக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வகையில் மேலும் ஒரு கோடியே 80 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது .
உள்ளூர் சந்தைகளில் முட்டைகளின் விலை வெகுவாக அதிகரித்துச்செல்லும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைக்கிணங்க இந்தியாவிலிருந்து மேற்படி ஒரு கோடியே 80 இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
முட்டைகளுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் இதுவரை அரச பொது வாணிப கூட்டுத்தாபனம் மூலம் 155 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது .
அதனையடுத்து எதிர்வரும் டிசம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் மேலும் ஒரு தொகை முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
அது தொடர்பில் இம்முறை அமைச்சரவையில் அவரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்