துருக்கியின் முன்னிலை கால்பந்து லீக் போட்டி ஒன்றில் கழகம் ஒன்றின் தலைவர் ஒருவர் நடுவரின் மீது குத்துவிட்டு அவரை கீழே சாய்த்ததை அடுத்து அந்த கால்பந்து லீக் தொடர் காலவரையின்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (11) நடந்த சுப்பர் லீக் போட்டியில் அங்காராகுசு கழகத்தின் தலைவர் பருக் கொகா அந்தக் கழகத்தின் ரிசெஸ்போர் அணிக்கு எதிரான போட்டியின்போதே நடுவரை தாக்கினார்.
இந்நிலையில் கொகாவை கைது செய்ய துருக்கி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டதோடு வன்முறையில் ஈடுபட்ட மேலும் இருவரை தடுப்புக் காவலில் வைக்கும்படியும் கூறியது.
போட்டியின் 97 ஆவது நிமிடத்தில் எதிரணி பதில் கோல் திருப்பி ஆட்டம் 1–1 என சமநிலையுற்றதை அடுத்து மைதானத்திற்குள் வந்த கொகா நடுவரை தாக்கினார். இந்த சம்பவம் துருக்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.