மூதூர் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் வளாக நுழைவாயில் போக்குவரத்தை சீர்செய்யும் நோக்கில் அவ்வளாகத்தில் தரைக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
கோட்டையாற்றுமுனை கடற்கரையை அண்டியதாக அமைந்துள்ள வளாகத்தில் மழை காலத்தில் நீர் தேங்கி, சேறும் சகதியுமாக வளாகம் காணப்பட்டதை தொடர்ந்து, இவ்வளாகத்தில் தரைக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் வினைத்திறன்காண் தடைதாண்டலை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் இதற்காக 5 இலட்சம் ரூபாவை அன்பளிப்பு செய்தனர். இதற்கான நிகழ்வு அண்மையில் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி நிர்வாகக் கிளைப் பணிப்பாளர் சிறிமா தசநாயக்கா, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் இஸட்.எம்.எம்.நளீம் முனவ்வரா ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
மூதூர் தினகரன் நிருபர்