131
பொலிஸார் குறித்த பொதுமக்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து பொலிஸ் துறையினருக்கான கிரிக்கெட் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.எதிர்காலத்தில் போக்குவரத்து பொலிஸார் குறித்து கூடிய அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மூன்று மாத காலத்துக்கு பதில் பொலிஸ் மா அதிபராக தென்னகோன் அண்மையில் நியமிக்கப்பட்டமை தெரிந்ததே!