Home » பிலிப்பைன்ஸ் குண்டு வெடிப்பில் நால்வர் பலி

பிலிப்பைன்ஸ் குண்டு வெடிப்பில் நால்வர் பலி

by damith
December 4, 2023 9:04 am 0 comment

தென் பிலிப்பைன்ஸில் உள்ள மிண்டனாவ் மாநிலப் பல்கலைக்கழகத்தில் கத்தோலிக்க வழிபாடு நடந்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் நால்வர் கொல்லப்பட்டனர்.

நேற்று (03) நடந்த இச்சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர். வெடிப்புக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். ஐ.எஸ். குழு ஆதரவான கிளர்ச்சியாளர்களின் செயலாக இது இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. 2017ஆம் ஆண்டு 5 மாதங்களாகப் போராளிகளால் முற்றுகையிடப்பட்ட மராவி நகரில் வெடிப்பு நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இராணுவ நடவடிக்கையில் டாவ்லா இஸ்லாமியா பிலிப்பைன்ஸ் குழு உறுப்பினர்கள் உட்பட 11 கிளர்ச்சியாளர்களைக் கொன்றதாக பிலிப்பைன்ஸ் இராணுவம் கூறியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT