பெண்களை தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் சமூக மட்ட தொழில்துறைசார் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட யுவதிகள் மற்றும் பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக, அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.
முறைசாரா வாழ்நாள் கல்வியூடாக பெண்களைத் தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் வேலைத் திட்டத்திற்கு அமைய, இப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கான களவிஜயம் அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அனுலா தலைமையில் இடம்பெற்றது. ஆடை உற்பத்தி தொழில்துறைக்காக வவுணதீவு பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 20 யுவதிகள் இதன்போது அழைத்துச் செல்லப்பட்டனர்.
மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு இவர்கள் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.இக்குழு அம்பாறை மாவட்டத்திலுள்ள பல்வகை சமூக மட்ட ஆடை உற்பத்தி நிலைங்களுக்குச் சென்று அங்குள்ள உற்பத்தி முறைமைகள் மற்றும் செய்முறை நுணுக்கங்களையும் அவதானித்தது.
(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)