நாட்டில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய (30) நிலவரப்படி, தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கமைய நேற்று வியாழக்கிழமை (30) ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 1,68,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 1,85,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் காட்டி வருகிறது. முந்தைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய விலைகள் அதிகரிப்பை காட்டுவதாக தங்க வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
அண்மைக் காலங்களில் 24 காரட் தங்கம் 1,60,000 ரூபாவுக்கும், ஒரு பவுண் 24 கரட் தங்கம் 1,70,000 ரூபாவுக்கும் விற்கப்பட்டன. தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டாலும், முந்தைய காலத்தை விட தங்க விற்பனை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.