ஒரு நாள் மற்றும் ரி20 சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்காக சிம்பாபே அணி எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
2024 ஜனவரி 6ஆம் தேதி ஆரம்பமாகும் இந்த தொடரில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று ரி30 போட்டிகளில் விளையாடவுள்ளன.
இதன் ஒருநாள் போட்டிகள் ஜனவரி 06 ஆம் தேதி தொடக்கம் 15ஆம் திகதி வரை, பல்லைகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
ரி20 சர்வதேச போட்டிகள் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த இரு சர்வதேச தொடர்களும் பகலிரவு போட்டிகளாகவே நடைபெறவுள்ளன.
இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற உலகத்தின் நகர் தொடருக்கு பின்னர் இலங்கை அணி பங்கேற்கும் முதல் கிரிக்கெட் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்தபோதிலும், இலங்கை அணி சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.