க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படமாட்டாதென்றும் திட்டமிட்டபடி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை, பரீட்சை நடத்தப்படுமென்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு நேற்று (22) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது (வழக்கு எண் SC/FR/240/2023) மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மற்றைய மனு (வழக்கு எண் SC/FR/254/2023) மனுதாரர்களால் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன்படி, முன்னர் திட்டமிட்டபடி, இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் ஏற்பாடு செய்யுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.