Tuesday, May 14, 2024
Home » GCE A/L பரீட்சை திட்டமிட்டபடி ஜனவரி 04 ஆம் திகதி நடக்கும்
ஒத்திவைப்பு மனுக்கள் நிராகரிப்பு

GCE A/L பரீட்சை திட்டமிட்டபடி ஜனவரி 04 ஆம் திகதி நடக்கும்

by sachintha
November 23, 2023 9:59 am 0 comment

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படமாட்டாதென்றும் திட்டமிட்டபடி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை, பரீட்சை நடத்தப்படுமென்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு நேற்று (22) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது (வழக்கு எண் SC/FR/240/2023) மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மற்றைய மனு (வழக்கு எண் SC/FR/254/2023) மனுதாரர்களால் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன்படி, முன்னர் திட்டமிட்டபடி, இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் ஏற்பாடு செய்யுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT