கிழக்கு மாகாண ஆளுநரின் முயற்சியால் கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் முறையாக அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு மாத காலத்துக்குள் வைத்தியசாலையொன்று நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கோனோகொல்ல கிராமத்தின் வைத்தியசாலையே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் அம்பாறை மாவட்ட கோனோகொல்ல கிராமத்துக்கு விஜயம் செய்தபோது, அப்பகுதி மக்கள் வைத்தியசாலையை நிர்மாணித்து தருமாறு கோரிக்கை முன்வைத்ததுடன், அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்கவினால் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.
இந்த வேண்டுகோளுக்கமைய 34 மில்லியன் ரூபா செலவில் அம்பாறை மாவட்டத்தில் கோனோகொல்ல கிராமத்தில் வைத்தியசாலை நிர்மாணிப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆளுநரின் இந்த துரித நடவடிக்கைக்கு அம்பாறை மாவட்ட மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.