இலங்கை மின்சார சபை மேலும் பல பகுதிகளுக்கு e-Billing முறையை நடைமுறைப்படுத்தவுள்ளது. இதன்படி தெஹிவளை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலாங்கொடை பிரதேச வாடிக்கையாளர் தங்களது மின் கட்டணங்களை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் டிஜிட்டல் வடிவில் பிரத்தியேகமாகப் பெறவுள்ளனர்.
இதையடுத்து,அச்சிடப்பட்ட காகித கட்டண பட்டியல்களை வழங்கும் வழக்கமான நடைமுறை நிறுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் மாதங்களில் அச்சிடப்பட்ட காகித கட்டண பட்டியல்களை வழங்குவது படிப்படியாக நிறுத்தப்படவுள்ளதால், நாடு முழுவதும் உள்ள மின்சார சபை வாடிக்கையாளர்களை இந்த வசதியான சேவைக்கு உடனடியாக பதிவு செய்யுமாறு மின்சார சபை கேட்டுள்ளது.
SMS மூலம் பதிவு செய்ய, REG<space>ஐத் தொடர்ந்து உங்கள் A/C கணக்கு இலக்கத்தை பதிவு செய்து 1987க்கு அனுப்ப வேண்டும். Online இல் பதிவு செய்ய, http://ebill.ceb.lk ஐப் பார்வையிடவும். வேறு வழிமுறைகளைப் பின்பற்றவும். இ-பில்லிங் முறையை வெற்றிகரமாக செயல்படுத்த ஒத்துழைப்பைத் தருமாறு மின்சார சபை வாடிக்கையாளர்களிடம் கேட்டு ள்ளது.இம்முயற்சியால் ஆண்டுக்கு சுமார் நூறு மில்லியன் தாள்கள் சேமிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.