87
யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விரத பூஜை நேற்று செவ்வாய்க்கிழமை (14) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கந்தசஷ்டி விரதத்தின் முதலாம் நாளான நேற்றையதினம் அலங்காரக் கந்தப்பெருமான் இடப வாகனத்தில் வீற்று, உள் வீதியூடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
எதிர்வரும் 18ஆம் திகதி சூரசம்ஹாரம் நடைபெற்று, 19ஆம் திகதி மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்று, கந்தசஷ்டி விரதம் இனிதே நிறைவடையுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோப்பாய் குறூப் நிருபர்