73
கேதார கௌரி விரதத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் திங்கட்கிழமை கேதார கெளரி அம்பாளின் காப்புக் கட்டுதல் பூஜை, யாழ். தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நேற்று முன்தினம் காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகிய பூஜையைத் தொடர்ந்து முற்பகல் 10.00 மணியளவில் விரத அடியார்களுக்கு கௌரிக் காப்பு வழங்கப்பட்டது. பல பாகங்களிலிருந்தும் கேதார கௌரி பூஜையில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கரவெட்டி தினகரன் நிருபர்