அக்குறணை மள்வானஹின்ன செயற்கை நுண்ணறிவுக் கிராமத்தின் தலைவர் தொழிலதிபர் டி. எல். எம். நவாஸின் சுமார் 8 மில்லியன் ரூபா நிதியுதவியில் மள்வானஹின்ன பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்கள் மற்றும் பிரதேத்திலுள்ள ஏனைய பாடசாலைப் பிள்ளைகளின் நலன்கருதி ஜும்ஆப் பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப கற்கை நிலையத்திறப்பு விழா அதன்தலைவர் டி. எல். எம். நவாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம். ஐ. எம் முப்தி ரிஸ்வி கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இதன் போது மள்வானஹின்ன பாடசாலைக்கு மூன்று மாடிகளைக்கொண்ட வகுப்பறை கட்டட தொகுதியொன்றையும் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தொழிலதிபர் டி. எல். எம். நவாஸ் இதன்போது தெரிவித்தார். இந்நிகழ்வில் சப்ரகமுக பல்கலைக்கழகப் பேராசிரியர் எம். எஸ். எம். அஸ்லம், கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சாமிலா தாவூத், பாடசாலை அதிபர் இம்ரான், மள்வானஹின்ன பசுமை மாற்றத்திற்கான தலைவர் பாயிஸ், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மாவத்தகம நிருபர்மள்வானஹின்னவில் தகவல் தொழில்நுட்ப கற்கை நிலையம் திறந்து வைப்பு
94
previous post