முச்சக்கர வண்டி சாரதி ஒருவர், அவற்றை உரியவரிடம் ஒப்படைத்துள்ளளார்.கெக்கிராவ பிரதேசத்தில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்தப்பையில்,சுமார் 2,00,000 ரூபா பணம், புதிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன.
கெக்கிராவ – ஒலுகரத கிராமத்தில் வசிக்கும் 48 வயதுடைய என்.பி பாலித பீரிஸ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே கண்டெடுத்த பையை ஒப்படைத்தவராவார்.
இந்த பணப் பையின் உரிமையாளர் முச்சக்கரவண்டியில் பயணித்ததாகவும், அவர் தனது பையை மறந்துவிட்டு இறங்கியதாகவும் தெரியவந்துள்ளது. கைப்பையின் உரிமையாளர் இப்லோகம – மஹமிகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் எஸ். தயாவதி என்ற 53 வயது பெண், என தெரியவந்துள்ளது.
முச்சக்கரவண்டி சாரதி, கெக்கிராவ பொலிஸாரின் உதவியுடன் கைப்பையை உரிமையாளரிடம் மீள வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.