பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு, மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுத்து 15 இலட்சம் ரூபாவை பலாத்காரமாக பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க கிருளப்பனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கிணங்க கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
அதற்கமைய இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாவதற்கு இடமளித்த மற்றும் நிதி அனுசரணைகளை பெற்றுக்கொடுத்துள்ள இரண்டு சந்தேக நபர்கள் தம்புள்ளை பெல்வெஹேர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 38 – 40 வயதுடையவர்களாவர் அந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
லோரன்ஸ் செல்வநாயகம்