தமிழ் நாட்டு மீனவர்கள் 27 பேரின் விடுதலையையும் துரிதப்படுத்துமாறு இந்திய லோக் சபா தமிழ் நாடு பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியிடம் அவரது அலுவலகத்தில் (28) சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழ் நாடு பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தலைமையிலான குழுவினருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரிக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு அமைச்சரிடம் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் அலிசப்ரி, தமிழ் நாடு பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோள் தொடர்பில் கவனம் செலுத்துவேன். மேலும் இவர்களது விடுதலை சம்பந்தமாக உரிய அதிகாரிகள் ஊடாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உடனடியாக விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் இரண்டு நாடுகளும் இணைந்து வடக்கில் மீன்பிடியாளர்களது பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வைப் பெற்றுத்தருமாறும் பாராளுமன்ற உறுப்பிணர் நவாஸ்கனி அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.
(அஷ்ரப் ஏ சமத்)