ஸ்ரீ லங்கா ஐக்கிய நாடுகள் சங்கத்தின் 78ஆவது ஐக்கிய நாடுகள் தின தேசிய வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
குவைத் நாட்டின் முன்னாள் தூதுவரும் ஸ்ரீலங்கா ஐக்கிய நாடுகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.ஏ.சி.எம். சுஹைல் பிரதம அதிதியாகவும், முன்னாள் தூதுவர் மற்றும் வியன்னாவிற்கான ஐ.நாவிற்கான நிரந்தரப் பிரதிநிதியுமான கலாநிதி தயந்த லக்சிறி மெண்டிஸ் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
ஐக்கிய நாடுகளின் கொடியை பிரதம அதிதி எம்.எம் சுஹைல் ஏற்றிவைக்க, தேசியக் கொடியை ஐக்கிய நாடுகள் சங்கத் தலைவர் எம். எம். சவாஹிர் ஏற்றி வைத்தார்.
பிரதம அதிதி, கௌரவ அதிதி மற்றும் சிறப்பு விருந்தினரான கலாநிதி நோயல் சோமசுந்தரம் , அகில இலங்கை ரீதியில் சிறந்த பேச்சாளர் போட்டியில் வெற்றி பெற்ற காலி மஹிந்த கல்லூரி மாணவர் சேனுத் வன்னியாரச்சி ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்வில் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ருஸைக் பாரூக்