சர்வதேச மனித நேய அமைப்பான முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் முன்மாதிரிக் கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலைக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் புல்மோட்டை சதாம் முஸ்லிம் வித்தியாலயம், ஜின்னாபுரம் கலவன் பாடசாலை மற்றும் புல்மோட்டை மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான 25 சைக்கிள்கள் கையளிக்கும் நிகழ்வு கடந்த (13) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
புல்மோட்டை சதாம் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் குச்சவெளி உதவி பிரதேச செயலாளர் திருமதி பி. மோஹனமுரளி, புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.டபிள்யூ விஜயகோன், பாடசாலை அதிபர்கள், முஸ்லிம் எயிட் செயற்திட்ட முகாமையாளர் பாஸ்லான் தாசிம், முஸ்லிம் எயிட் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் சிக்கியிருக்கும், வறிய, பின்தங்கிய குடும்பங்களிலுள்ள கல்வி கற்கின்ற தூர பிரதேசங்களில் இருந்து வருகின்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இவ்வுதவி வழங்கப்பட்டது.
கந்தளாய் தினகரன், தம்பலகாமம் குறூப் நிருபர்கள்