Home » ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு

ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு

தொழிற் கல்விக்காக 25,000 ரூபா நிதியுதவி

by damith
October 10, 2023 6:00 am 0 comment

ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகள் தொழிற்பயிற்சிகளை மேற்கொள்வதற்காக நிதியுதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை ஊழியர் நம்பிக்கை நிதியம் எடுத்துள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடநெறியொன்றை மேற்கொள்வதற்காக ஆகக் குறைந்தது 25,000 ரூபா நிதி ஒத்துழைப்பொன்று அந்த சபை மூலம் வழங்கப்படவுள்ளது.

பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, மேற்படி சபையின் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள (NVQ 3-4) மட்டத்திலான பாடநெறியை தெரிவுசெய்வது அவசியம். இப்பாடத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றை தெரிவுசெய்வதும் அவசியமாகும்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT