இலங்கைப் பணியாளர்களுக்கு பிரிட்டனில் பராமரிப்பு தொழில் துறையில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக, அந்நாட்டின் உயர் மட்ட குழுவினருடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமைச்சில் நேற்று நடைபெற்ற இந்த பேச்சுவாத்தையின் போது, விசேடமாக இராணுவ சேவையில் குறிப்பிட்ட வருடங்கள் சேவையாற்றி சட்டபூர்வமாக ஓய்வு பெற்றவர்களுக்கு பராமரிப்பு தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டது. இதற்கமைவாக 45 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட சட்ட ரீதியில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு இந்த வாய்ப்புகளை வழங்க தூதுக்குழு இணக்கம் தெரிவித்ததாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்தது.
பராமரிப்பு தொழில் துறையில்
இலங்கை பணியாளர்களுக்கு பிரிட்டனில் வேலைவாய்ப்பு
உயர்மட்டக்குழுவுடன் அமைச்சர் மனுஷ பேச்சு
615
previous post