முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்ற பணிப்புறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் கண்டன ஆர்பாட்டத்தில் இன்று (03) ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி பி.பிறோமநாத் பணிப்புறக்கணிப்பும், கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று காலை 10.00 மணிக்கு மட்டு. நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் சட்டத்தரணிகள் ஒன்றினைந்தனர்.
இதில் நீதித்துறை சுதந்திரத்துக்காய் குரல் கொடுப்போம், சட்டத்தின் முன் யாவரும் சமம், நீதித்துறையை அச்சுறுத்தாதே, பாரபட்சமற்ற விசாரணை வேண்டும், சுதந்திரத்தில் தலையிடாதே போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு அங்கிருந்து வீதியில் ஆர்பாட்டமாக நீதிமன்ற வீதி சுற்றுவட்டத்தை சென்று, மீண்டும் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்னால் சென்றடைந்து, நீதி கோரி சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்பாட்டக்காரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.
கல்லடி குறூப்நிருபர்