Friday, May 3, 2024
Home » மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

இரு நாட்டு உறவுகள் குறித்தும் உரையாடினார்

by damith
October 2, 2023 6:00 am 0 comment

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மொஹமட் முயிசூவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மொஹமட் முயிசூவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை – மாலைதீவு மக்களின் மேம்பாட்டிற்காக இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை பலதரப்பு கூட்டுச் செயன்முறைகளாக பலப்படுத்திக்கொள்ளவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது விருப்பம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் மாலை தீவிற்கு சுபீட்சம் கிட்டும் என்ற எதிர்பார்ப்புடன் அந்நாட்டின் புதிய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மாலைதீவு ஜனாதிபதியுடனான இந்த தொலைபேசி உரையாடலின்போது, முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி இப்றாஹீம் மொஹமத் சோலி மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நசீட்டும் உடனிருந்துள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT