Sunday, May 12, 2024
Home » உருக்குலைந்த நிலையில் உடல் எச்சம் மீட்பு

உருக்குலைந்த நிலையில் உடல் எச்சம் மீட்பு

by Rizwan Segu Mohideen
October 1, 2023 3:00 pm 0 comment

மன்னார் – சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் (ஆற்றுவாய்) சிதைவடைந்த நிலையில் உடல் எச்சமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை (29) முத்தரிப்புத்துறை மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் வலை வீசுவதற்காக சென்ற மீனவர்கள் குறித்த உடல் எச்சத்தை மீட்டுள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட உடல் எச்சம் தொடர்பாக சிலாவத்துறை பொலிஸாருக்கு மீனவர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

(தலைமன்னார் விஷேட நிருபர் – வாஸ் கூஞ்ஞ)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT