Sunday, May 5, 2024
Home » குடும்பத்தகராறு காரணமாக கணவன் குத்திக் கொலை

குடும்பத்தகராறு காரணமாக கணவன் குத்திக் கொலை

மனைவி கைது, நுவரெலியாவில் சம்பவம்

by damith
September 25, 2023 6:09 am 0 comment

கணவனை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் தொடர்பில் மனைவி நேற்று (24) கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா மாகஸ்தோட்ட, விஜிதபுர பிரதேசத்தில் வசித்து வந்த பஹிதரன் சந்திரசேகரன் (33) என்ற நபர் குடும்பத் தகராறு காரணமாக நேற்று முன்தினம் (23) இரவு கத்திக்குத்துக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நுவரெலியா விஜித்தபுர மார்கஸ்தோட்டத்தில் தனது வீட்டில் கணவன் மனைவிக்கிடையே நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. இதனையடுத்து மனைவினால் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகிய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான பாத்திமா ரிஸ்வானா என்ற மனைவி கைதுசெய்த நுவரெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலவாக்கலை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT