Sunday, May 5, 2024
Home » உயர்நீதிமன்ற நீதியரசருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதிக்கும் கௌரவம் வழங்கும் விழா

உயர்நீதிமன்ற நீதியரசருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதிக்கும் கௌரவம் வழங்கும் விழா

by sachintha
September 19, 2023 11:18 am 0 comment

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏட்பாட்டில் உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.திலீப் நவாஸ் மற்றும் மேல்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ.மஜீத் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் கடந்த அண்மையில் நடைபெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.றெளசுல் ஹாதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி ஜெ.ரொட்ஸ்கி, நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.சம்சுடீன், அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா, பொத்துவில் மாவட்ட நீதிபதி ஏ.சீ. றிஸ்வான், சம்மாந்துறை நீதிமன்ற நீதிபதி ரீ.கருணாகரன் ஆகியோரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

மாவட்ட, நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், சிரேஷ்ட, கனிஷ்ட சட்டத்தரணிகள், பள்ளிவாசல் பரிபாலனசபைத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எம்.ஏ. திலீப் நவாஸ், மேல்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ.மஜீத் ஆகியோருக்கு வருகை தந்திருந்த அதிதிகள் புடைசூழ அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.எம்.பஹீஜ், பொருளாளர் மு.பாத்திமா றிஸாமா, உதவிச் செயலாளர் என்.தமிழினியன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கினர். கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக அதன் தலைவர்களினால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

_எம். எப். றிபாஸ்

(பாலமுனை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT