Friday, May 17, 2024
Home » வாகன விபத்தில் இருவர் படுகாயம்

வாகன விபத்தில் இருவர் படுகாயம்

by Prashahini
September 18, 2023 2:33 pm 0 comment

திருகோணமலை பன்குளம் பகுதியில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (18) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை – அனுராதபுரம் ஏ12 வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்றே பன்குளம் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானது.

வாகனத்தில் பயணித்த இருவரும் வேலையின் நிமிர்த்தம் அம்பாறை – காரைதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கையில் சாரதியின் தூக்கம் காரணமாக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர்  – அப்துல்சலாம் யாசீம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT