Monday, May 20, 2024
Home » சந்நிதி ஆலயத்தில் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மரணம்

சந்நிதி ஆலயத்தில் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மரணம்

by Prashahini
August 31, 2023 12:56 pm 0 comment

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு காவடிகளுடன் நடந்து சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (30) இரவு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சமரபாகு, மாவடியைச் சேர்ந்த 51 வயதுடைய சுந்தரம் மோகன்ராஜ் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

சமரபாகு பகுதியிலிருந்து சந்நிதி ஆலயத்திற்கு காவடி எடுத்துச் சென்றவர்களுடன் நடந்து சென்ற மேற்படி குடும்பஸ்தர் ஆலயத்தில் இரவு 7.00 மணியளவில் மயங்கிச் சரிந்துள்ளார். பின்னர் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு செல்கின்ற போது இடையில் மீண்டும் மயங்கி விழுந்துள்ளார்.

எனவே, உடனடியாக அவரை முச்சகர வண்டியில் ஏற்றி வல்வெட்டித்துறை, ஊறணி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சடலம் இன்று (31) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமுடன், பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவில் விஷேட நிருபர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT