Monday, May 20, 2024
Home » ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்

by Prashahini
August 28, 2023 1:48 pm 0 comment

யாழ்ப்பாணம்‌ போதனா வைத்தியசாலையில்‌ நேற்று (27)  ஒரே தடவையில்‌ சுகப்பிரசவமாக மூன்று குழந்தைகள்  பிறந்துள்ளது

மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர்‌ அப்புத்துரை சிறிதரன்‌ தலைமையிலான மருத்துவக்‌ குழுவினர்‌ குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டனர்‌.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள பெண் ஒருவருக்கு இந்த மூன்று குழந்தைகளும் பிறந்துள்ளதுடன், மூன்று குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மருத்துவர் திரு. அப்புத்துரை ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மூன்று குழந்தைகளில் இரண்டு ஆண் குழந்தைகள் மற்றயது பெண் குழந்தை என்பதோடு, இது அப்பெண்ணிற்கு இரண்டாவது பிறப்பாகும்.

குறித்த பெண்ணிற்கு அதற்கு முன் முதல் பிறப்பில் ஒரு மகன் இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ரசுல தில்ஹார கமகே

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT