Friday, May 17, 2024
Home » ஹோமாகம தீவிபத்து; சம்பவம் தொடர்பில் ஆராய விசேட குழு விஜயம்

ஹோமாகம தீவிபத்து; சம்பவம் தொடர்பில் ஆராய விசேட குழு விஜயம்

by Prashahini
August 18, 2023 12:24 pm 0 comment

ஹோமாகம பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் இராசாயன களஞ்சியசாலையில் நேற்றிரவு ஏற்பட்ட தீப்பரவல் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்று இன்று (18) சம்பவ இடத்திற்கு செல்லவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த குழுவின் அவதானிப்புக்களின் பின்னர் வளி மற்றும் நீர்மாசடைவு தொடர்பில் முடிவுகளை எடுக்க முடியும் என அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த தொழிற்சாலைக்கு அருகில் வசிப்பவர்கள் நீரை பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறும் முகக் கவசங்களை அணியுமாறும் அவர் கோரியுள்ளார்.

UPDATE : தீப்பிடித்த ஹோமாகம தொழிற்சாலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதியின்றி நடாத்தப்பட்டது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT