சிங்கப்பூரில் வாழும் சீக்கிய சமூகத்தினர் ஒப்பீட்டளவில் சிறு தொகையினராக இருந்த போதிலும் நாட்டின் பல்வேறு துறைகளிலும் அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்புகளையும் சாதனைகளையும் அந்நாட்டின் பிரதிப் பிரதமர் லோரன்ஸ் வொங் பாராட்டியுள்ளார்.
சிங்கப்பூர் சீக்கிய ஆலோசனை சபையின் 75 ஆவது வருட நிறைவின் நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் சீக்கிய சமூகத்தினரைப் பாராட்டினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதிப் பிரதமர், சிவில் சேவை, நீதித்துறை, வணிகம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளிலும் சிறந்து விளங்கும் சீக்கியர்கள், தலைமைப் பதவிகளை வகிப்பதில் கொண்டுள்ள திறமைகளையும் ஆற்றல்களையும் விதந்து பேசினார்.
சிங்கப்பூரில் சீக்கியரின் பங்களிப்புக்கு பாராட்டு
436