Sunday, May 19, 2024
Home » நானுஓயாவில் வர்த்தகர் மீது கத்திக்குத்து; ஒருவர் படுகாயம்

நானுஓயாவில் வர்த்தகர் மீது கத்திக்குத்து; ஒருவர் படுகாயம்

by Prashahini
August 7, 2023 4:16 pm 0 comment

நானுஓயா பிரதான நகரில் இன்று (07) காலை இடம்பெற்ற வாக்குவாத சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் வியாபாரி ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் வர்த்தக நிலையத்தின் வாடகை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதலால் இந்த மோதல் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் கத்தியால் குத்தியவர்கள் சகோதரர்கள் எனவும் , இவர்கள் இருவரும் தானாகவே நானுஓயா நிலையத்தில் சரணடைந்ததாகவும் நானு ஓயா பொலிஸார் தெரிவித்ததோடு. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

டி.சந்ரு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT