Home » பஸ் – சீமெந்து லொறி மோதி விபத்து; பெண் ஒருவர் பலி (UPDATE)

பஸ் – சீமெந்து லொறி மோதி விபத்து; பெண் ஒருவர் பலி (UPDATE)

- மேலும் 22 பேர் காயம்; வரக்காபொல பகுதியில் சம்பவம்

by Rizwan Segu Mohideen
August 2, 2023 3:48 pm 0 comment

இன்று (02) காலை வரக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்ஹிரிய பகுதியில், பஸ்ஸொன்று லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பஸ்ஸில் பயணித்த 22 பேர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற இ.போ.ச. பஸ் மீது எதிர்த்திசையில் வந்த சீமெந்து ஏற்றப்பட்ட லொறி மோதியதில் பஸ் புரண்டு, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்த 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விபத்தில் மரணமடைந்தவர் குருவல, தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது வரக்காபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Update 2: 15.48
Update 1: 12.36

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT