மானிப்பாய் நகர்பகுதியில் சட்டவிரோதமான முறையில் நான்கு கடலாமைகளை பட்டா ரக வாகனத்தில் கொண்டு சென்ற இருவரை மானிப்பாய் பொலிஸார் இன்று (31) காலை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மில்றோய் தெரிவித்தார்.
மானிப்பாய் நகர்பகுதியில் வீதிபோக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்தவேளை மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மில்றோய் உட்பட்ட போக்குவரத்து பொலிஸார் பட்டா ரக வாகனமொன்றை வழிமறித்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனத்தின் பின்புறமாக சாக்கினால் கட்டப்பட்டிருந்த மூடைகளை சோதனையிட்ட பொழுது 4 கடலாமைகளை உயிருடன் கைப்பற்றினர்.
இதனையடுத்து 47 மற்றும் 32 வயதான கொழும்புத்துறை மற்றும் இளவாலை பகுதியை. சேர்ந்த இருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் குறித்த நபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் முதற்கட்ட விசாரணையில் இளவாலை கீரிமலை கடற்பரப்பில் சட்டவிரதமாக பிடிக்கப்பட்ட ஆமைகளை குருநகர் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது.
பருத்தித்துறை விசேட நிருபர்