953
உடப்பு சின்னக்கொலனி கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று இன்று (28) கரையொதுங்கியுள்ளது. இது சுமார் 30 கிலோ எடை கொண்டதாகக் காணப்படும் இக்கடலாமையின் கழுத்து துண்டாடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
கடலில் பாரிய வலையில் சிக்கிக்கொண்ட பின்னர் இது மீனவர்களால் வெட்டப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
உடப்பு குறூப் நிருபர்