Monday, May 13, 2024
Home » களுத்துறை கடற்கரையில் பெண் மற்றும் குழந்தையின் சடலம் மீட்பு

களுத்துறை கடற்கரையில் பெண் மற்றும் குழந்தையின் சடலம் மீட்பு

- காணாமல்போன தாய், மகளுடையது என்கின்றனர் பொலிஸார்

by Prashahini
July 28, 2023 2:20 pm 0 comment

களுத்துறை வடக்கு கடற்கரையில் நிர்வாணமாக காணப்பட்ட பெண் ஒருவரின் சடலத்தை இன்று (28) காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, (27) இரவு களுத்துறை வடக்கு நாகசந்திக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டிருந்ததோடு, விசாரணைகளின் பின்னர் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று (28) இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஹல்கந்தவில பிரதேசத்தில் தாயும் மகளும் காணாமல்போனதாக ஏற்கனவே தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில், நேற்றிரவு மீட்கப்பட்ட குழந்தை மற்றும் இன்று காலை மீட்கப்பட்ட பெண்ணின் சடலங்கள் ஹல்கந்தவில பிரதேசத்தில் காணாமல்போன தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT