Thursday, May 16, 2024
Home » பஸ் மீது கெப் மோதி விபத்து; 5 பேர் மருத்துவமனையில்

பஸ் மீது கெப் மோதி விபத்து; 5 பேர் மருத்துவமனையில்

by Prashahini
July 18, 2023 2:27 pm 0 comment

மொரட்டுவ புதிய காலி வீதியில் எகொட உயன சந்தியில் இன்று (18) காலை 6 மணியளவில் கொரலவெல்ல வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுடன் களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீன் வியாபாரிகளை ஏற்றிச் சென்ற கெப் வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானது.

கெப் வண்டியில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கெப் சாரதியின் தூக்கக் கலக்கத்தினால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக எகொட உயன பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து டயர் சேதமடைந்ததால் கொரலவெல்ல பிரதேசத்தில் வீதியின் இடதுபுறத்தில் நிறுத்தப்பட்டிருந்ததுடன். கண்டி நோக்கி பயணித்த கெப் வண்டி பேருந்தின் பின்பகுதியில் மோதியது. இதில் கெப் வண்டியின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் கெப் வண்டியை கைப்பற்றி அதன் சாரதியை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT