உடப்பு ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் ஆலயத்தில் இன்று (14) அதிகாலை 2 மணி தொடக்கம் அம்மனின் கழுத்தில் அணியப்பட்டிருந்த நகைகள் மற்றும் உண்டியல் பெட்டிகள் திருடப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்தில் சிசிடிவி கேமராவில் குறிப்பிட்ட சில காட்சிகள் காணப்பட்டுள்ளது. அவை பரீசீலணை செய்யப்படுகின்றது. இது சம்பந்தமாக உடப்பு பொலிஸ் நிலையத்தில் பரிபாலன சபையின் தலைவரினால் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது, அம்மனின் இரண்டு கண் மலர்கள், நெற்றிப்பட்டம் ஒன்று, அம்மனின் கொடி, மூக்குத்தி, போன்றவை களவாடப்பட்டுள்ளது. இவை 10பவுண் எடை கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆலய பூசகர் திரு.சா.கந்தநாதன் அவர்கள் இன்று (14) காலை ஆலயத்தினுள் சென்ற போது, அங்கு கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டதையிட்டு களவு போனதை உறுதிப்படுத்திக் கொண்டார்.
உடனடியாக ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு.இ.கலைச்செல்வன் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்ததையிட்டு அதன் பின்னர் உடப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் விஷேட பொலிஸ் மூலம் தொடர்ந்தும் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
உடப்பு குறூப் நிருபர்