Monday, May 20, 2024
Home » அஸ்வெசும தரவுகளை இற்றைப்படுத்துவதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவு

அஸ்வெசும தரவுகளை இற்றைப்படுத்துவதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவு

by Kalky Jeganathan
July 13, 2023 3:32 pm 0 comment

அஸ்வெசும திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை கணினி கட்டமைப்பிற்குள் உள்ளடக்குவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (13) நிறைவடைவதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

குறித்த இத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கான கால அவகாசம் கடந்த 10ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

இதுவரை 9 இலட்சத்து 68 ஆயிரம் மேன்முறையீடுகளும், 17500 எதிர்ப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT