Friday, May 17, 2024
Home » 2 வயது குழந்தையின் இளம் தாய் தற்கொலை

2 வயது குழந்தையின் இளம் தாய் தற்கொலை

by Prashahini
July 13, 2023 11:53 am 0 comment

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மறவன்புலவில் பகுதியில் நச்சு விதை ஒன்றை உட்கொண்டு இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக நேற்று (12) பிற்பகல் நச்சு விதையை உட்கொண்ட பெண்ணை உறவினர்கள் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்த போதிலும் அவர் வைத்தியசாலையில் அனுமதித்த சில மணிநேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மறவன்புலோ பகுதியைச் சேர்ந்த 24 வயதான இரண்டு வயதுக் குழந்தையின் தாயொருவரே இவ்வாறு விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். மேற்படி மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சாவகச்சேரி விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT