1.3K
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மறவன்புலவில் பகுதியில் நச்சு விதை ஒன்றை உட்கொண்டு இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக நேற்று (12) பிற்பகல் நச்சு விதையை உட்கொண்ட பெண்ணை உறவினர்கள் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்த போதிலும் அவர் வைத்தியசாலையில் அனுமதித்த சில மணிநேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மறவன்புலோ பகுதியைச் சேர்ந்த 24 வயதான இரண்டு வயதுக் குழந்தையின் தாயொருவரே இவ்வாறு விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். மேற்படி மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சாவகச்சேரி விசேட நிருபர்