குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியில் பயணித்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது
இச்சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தம்பதியினர் தமது மகளை பாடசாலையிலிருந்து அழைத்து வர சென்ற வேளையில் அதி வேகத்தில் வந்த லொறி மழையின் காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து இடம்பெற்ற வேளையில் லொறியின் சாரதி விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யாது விபத்தை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து கொண்டிருந்ததாகவும் இதனைக் கண்ட சிலர் சாரதியைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.