270
நாட்டுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் ஜா-எல கலால் வரித் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜா-எல கலால் வரித் திணைக்களத்தினரால் நடத்தப்பட்ட சோதனையின் போது, இந்த E சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட E சிகரெட்டுகளால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக, ஜா-எல கலால் வரித் திணைக்கள அத்தியட்சகர் தெரிவித்தார்.
இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பலர் சிகரெட்டுகளுக்கு அடிமையாகியுள்ளமை தெரியவந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இது மிகவும் ஆபத்தான விடயமெனவும் சுட்டிக்காட்டினார்.