ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன் என சாய்ந்தமருது மத்ரஸாவின் நிர்வாகியான மெளலவி சானாஸ் தெரிவித்ததாக, அங்கு கண்காணிப்பாளராக கடமையாற்றிய பெண் ஒருவர் அதிர்ச்சி தரும் தகவலொன்றை வழங்கியுள்ளார்.
கடந்த டிசம்பர் 05ஆம் திகதி சாய்ந்தமருது மத்ரஸாவில் சடலமாக மீட்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 13 வயது மாணவனின் மரணம் தொடர்பில், சிசிடிவி (CCTV) தொடர்பான பணியில் ஈடுபடும் தொழிநுட்பவியலாளர் வழங்கிய அதிர்ச்சி தரும் தகவலைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் இருதயபுரத்தில் இருந்து புனித இஸ்லாம் மதத்தை தழுவிய 3 பிள்ளைக்கு தாயான குறித்த பெண் தனது பிள்ளைகளின் மத்ரஸா கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்துள்ளார்.
இந்நிலையில் மௌலவியை சந்தித்த அப்பெண் உதவி கோரியதாகவும், குறித்த மௌலவி தனக்கு மத்ரஸாவில் மாணவர்களை கண்கானிப்பதற்கான பதவி ஒன்றை வழங்கியதாகவும் அப்பெண் தெரிவித்தார்.
அந்த வகையில், சம்பவ தினத்தன்று என்ன நடந்தது என, அம்மத்ரஸாவில் கடமையாற்றிய கண்காணிப்பாளரான 34 வயதான குறித்த பெண்மணி வழங்கிய தகவலே இது.
நேர்காணல்: ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான்
மத்ரஸா மாணவனின் மரணம்; அழித்த CCTV காட்சியை எடுக்க முடியுமா என கேட்ட மௌலவி