207
யாழ். காரைநகர் இந்துக் கல்லூரியினுடைய கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் 25ஆவது வெள்ளிவிழாவுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு நாளை சனிக்கிழமை (16) மாலை 5.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த சொல்லின் செல்வம் பி. மணிகண்டன் ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ எனும் தலைப்பில் இந்நிகழ்வில் உரையாற்றவுள்ளதாக, நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ. இளங்கோவன், நிதி அமைச்சு அதிகாரி தி. விஸ்வரூபன், சைவமணி சண்முகரத்தினம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.