மாத்தளை மாவட்டத்தில் கலேவல நமடகாவத்தையில் அமைந்துள்ள உம்மு ஐமன் முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நாளை 2ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி கல்லூரியின் தலைவரும் பணிப்பாளருமான மௌலவி அஷ்ஷேஹ் எஸ்.ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நிபோன் பிளாஸ்டிக் நிறுவனத்தின் தொழிலதிபர் டி.ஜீ.ஜீ.எஸ்.எம்.எம். நிஸைஹர் பிரதம அதிதியாகவும் உம்மு ஐமன் முஸ்லிம் மகளிர் அரபு கல்லூரியின் முன்னாள் தலைவர் பபூடெக்ஸ் உரிமையாளர் ஏ.எஸ்.எம்.ஹனீப் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பிப்பார்.
பாணந்துறை இப்னு உமர் கற்கைப் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேஹ் முப்தி எம்.எப்.எம்.ரியாஸ் மற்றும் கண்டி கடுகல ஜும்ஆ மஸ்ஜித் பேஷ் இமாம் அஷ்ஷேஹ் எம்.எப்.ஷஹீட் ரமழான் ஆகியோர் இந்நிகழ்வில் விசேட பேச்சாளர்களாக கலந்து கொள்ளவுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
(மாத்தளை சுழற்சி நிருபர்)