பலாங்கொடை கல்வி வலயத்தின் இ/ அல்மினாரா ஆரம்ப பாடசாலை மாணவர்கள் அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் சிறப்பாக சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக இப்பாடசாலை மாணவர்கள் இச்சாதனையை நிலை நிறுத்தி வருவதாகவும் இச்சாதனைகளுக்காக தம்மை அர்ப்பணித்து செயலாற்றும் பொறுப்பாசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திக்குழு பழைய மாணவர் அமைப்பு மற்றும் நலன் விரும்பிகள் கல்வித்துறை சார் அதிகாரிகள் அனைவருக்கு ம் பாடசாலை அதிபர் முக்தார் சவாஹிர் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
சித்தியடைந்த மாணவர்களின் விபரங்கள் பின்வருமாறு எம்.ஆர்.றிப்கி அஹமட் (171) அஹமட்.ஐ.எப்.அம்ரா (170) எம்.ஜ.ருகையா (169) எம்.ஐ.எம் சுஹைல் (158) எம்.எப்.அஹமட். பிர் னாஸ் (154) எம்.எஸ்.எப்.சகாமா (153 ) எம்.ஆர்.எம்.ஹம்தி(152) எம்.ஆர். எ ப் . றைஹா (152) எம்.ஜே.பாத்திமா இபா (151) எம்.என்.எப்.தஹானி(151 ) எம்.ஆர்.எம்.தஸ்ரின் (149) எம்.ஆர். எப்.சீமா (148) எம்.ஏ.எப்.அசா (147) எ ஸ்.ராதிகா (147) எஸ்.நித்ருஜான் (14 7) எம்.ஏ.எப்.ஸஹ்ரா (146) எம்.ஐ.எப். ஷமா (144) எம்.ஆர்.எப்.அஸ்கா (144).
(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)