கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சிறுபோகச் செய்கையின் போது நட்டத்தை எதிர்நோக்கிய விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் டீசல் வழங்குவதற்கான அனுமதி கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சிறுபோகச் செய்கையில் பகுதியளவிலும் முழுவளவிலும் நட்டத்தை எதிர்நோக்கிய கிளிநொச்சி விவசாயிகளுக்கே டீசல் மானியமாக வழங்கப்படவுள்ளது
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்காக 80 லீற்றர் எரிபொருள் கிடைத்துள்ளது. இதேவேளை, மன்னார் மாவட்ட விவசாயிகளுக்காக 20 லீற்றர் எரிபொருளும் வவுனியா மாவட்ட விவசாயிகளுக்காக 5,568 லீற்றர் எரிபொருளும் முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்காக 904 லீற்றர் எரிபொருளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தன் குறூப் நிருபர்