இலங்கையின் பிரபல சிரேஷ்ட நடனக் கலைஞர்களில் ஒருவரும், நடன ஆசிரியருமான கலாசூரி ரஜினி செல்வநாயகம் தனது 71ஆவது வயதில் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 87 வயதாகும்.
இராஜகிரிய கலப்பலுவ பிரதேசத்தில் வசித்து வந்த ரஜினி செல்வநாயகம் நேற்றிரவு (20) காலமானார்.
நடன ராணி என்று அழைக்கப்பட்ட ரஜினி செல்வநாயகம் கலா கீர்த்தி மற்றும் விஸ்வ கலா கீர்த்தி விருதுகளையும் பெற்றுள்ளார்.
பலாங்கொடையில் பிறந்து வளர்ந்த இவர், கலை உலகில் பிரவேசித்ததுடன், இலங்கை மாணவர்களுக்கு தனது அறிவை பரிசாக வழங்கிய அதீத திறமையான ஆசிரியையாக முத்திரை பதித்தார்.
இவர் இலங்கையின் தனித்துவமான நடனக் கலையை பரப்புவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ‘சாமர கலாயதனய’ எனப்படும் நடன அகடமியை 1975 பெப்ரவரி 05ஆம் திகதி ஒரு சிறிய வகுப்பறையாக ஆரம்பித்த ரஜினி செல்வநாயகம், நடனக் கலை மூலம் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களை மேம்படுத்தும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்.
கலாசூரி ரஜினி செல்வநாயகத்தின் இறுதிச் சடங்குகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுமென, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.