225
தேசிய மீலாதுன் நபி விழா நாளை மறுதினம் (22 ) மன்னார் சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கவுள்ளார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில், புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், மன்னார் மாவட்டச் செயலாளர் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது மன்னார் மாவட்டத்தின் வரலாற்று நூல், மீலாத் நினைவு மலர் என்பனவும் வெளியிடப்படவுள்ளன.
ஏ.எம்.ஜாவித்