539
யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில், கரம்பகம் பிரதேசத்தில் இருவேறு தனியார் காணிகளில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் சில நேற்று முன்தினம் திங்கட்கிழமை (02) அடையாளம் காணப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு காணியில் கைக்குண்டொன்றும் மற்றைய காணியில் மோட்டார் ஷெல்லொன்றும் காணப்பட்டதை அவதானித்த காணி உரிமையாளர்கள், இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினர்.
இந்நிலையில், சம்பவ இடங்களுக்குச் சென்று பொலிஸார் விசாரணை செய்ததுடன், வெடிபொருட்களை செயலிழக்கச் செய்து, அவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
சாவகச்சேரி விசேட நிருபர்